Sunday, November 22, 2009

ஆதி முதற் காலம் பூத்ததிங்கே
ஆஹா... ஆதி எனும் தாளம் வார்த்ததிங்கே
மோகமெலாம் தான் விடுத்து
மாமுனிகள் தவம் செய்து
ஞான கங்கை பெருகி வந்ததிங்கே

யாவரிங்கே கும்மிருட்டாய் குகைகள் செய்தார்
யாவரிங்கே கொம்புத்தேன் கூடுகள் செய்தார்
யாவரிங்கே கும்மிருட்டாய் குகைகள் செய்தார்
யாவரிங்கே கொம்புத்தேன் கூடுகள் கொய்தார்
யாவரிங்கே அடிக்கல் நாட்ட உரிமை படைத்தார்
யானை ஏறா மாமலையில் மௌனம் உடைத்தார்
நாம் வாழும் காடு நம் தாய் வீடு என்று
இசைக்கின்றதாரோ காற்றோ காட்டருவிகளோ

எந்த கைகள் அரணிக் கோல் கடைந்ததிங்கே
சிந்தனையில் அறிவென்னும் செந்தழல் தோன்ற
ஞான சூர்ய நெஞ்சிருக்கும் ஞானவான்கள் போல்
நூறு வகை பூக்களிலே சுடர்கள் எழுப்பும்
நாம் வாழும் காடு நம் தாய் வீடு என்று
இசைக்கின்றதாரோ காற்றோ காட்டருவிகளோ
அடி தோழி அடி தோழி.. அடை காக்கும் சிறு கோழி
மயில் முட்டை வாங்கி உனது கூட்டில் வெச்சேனே
அடை காக்கும் முட்டைக்குள்ளே உசுரை வெச்சேனே
கலர் கலரா கனவிருக்கு கண்ணுக்குள்ள
கவிதை ஒன்னு பூத்திருக்கு நெஞ்சுக்குள்ளே

அவர் எங்கே நானும் எங்கே ஆனால் இங்கே உள்ளம் பொங்குதடி கடல் போல
அவர் பெயரின் பலகை போல அவரும் கூட எட்டா உயரம் தான் மலை போல
சொல்லாத வார்த்தையோ என்நெஞ்சை முட்டுது
தொண்டைக்குள் முள்செடி யார் வந்து நட்டது
அடிநேஞ்சுக்குள்ளே ஆழக்குழி வெட்டி ஆசைகளை புதைக்கிறே நீ

நீ வந்து தோன்றிய பின்னே ஜன்னல் கம்பி கதைகள் பேசியதே.. பேசியதே..
பூ வாடும் ஓசை கேட்டும் வளையல் போடும் ஓசை கேட்கலையோ.. கேட்கலையோ
பிறக்காத கவிதையோ பேனாவை திருடுது
உன் நாவல் கண்டதும் உயிர் கொஞ்சம் வாடுது
நான் வணங்கும் சாமி நலங்கிள்ளி என்று பரீட்சை எழுதிவிட்டேன்